உயிர் பெற்ற நூல்கள்!
ஆகஸ்ட் 22 அன்று சென்னை அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில் நடைபெற்ற சிவில் சர்வீசஸ் பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக அமைந்தது நிறைவான ஒரு நிகழ்வு. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கெடுத்தனர். இவ்வளவு பேர் பங்கெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. அரங்கம் நிரம்பி வழிந்தது. மாணவர்கள் பலர் நான்கு மணிநேரம் நின்றுகொண்டே கவனித்தது அவர்களின் தேடுதலையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியது.